சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை வால்பாறை அருகே சர்க்கரை நோய் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை அருகே உள்ள முடிஸ், கஜமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான ரவிக்குமார். நகைக்கடை மேலாளராக உள்ளார். இவருக்கு கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பு 31-வயதான சந்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த சந்தியாவுக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி மேலும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சந்தியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வந்ததாக தெரிகிறது.
கடந்த சில தினங்களாக சர்க்கரை நோய் அதிகரித்ததால், அவரது உறவினர்கள் சந்தியாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சந்தியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை அருகே உள்ள முடிஸ், கஜமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான ரவிக்குமார். நகைக்கடை மேலாளராக உள்ளார். இவருக்கு கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பு 31-வயதான சந்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த சந்தியாவுக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி மேலும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சந்தியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வந்ததாக தெரிகிறது.
கடந்த சில தினங்களாக சர்க்கரை நோய் அதிகரித்ததால், அவரது உறவினர்கள் சந்தியாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சந்தியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.