கோவை வால்பாறை அருகே சர்க்கரை நோய் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு..!

சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே சர்க்கரை நோய் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை அருகே உள்ள முடிஸ், கஜமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான ரவிக்குமார். நகைக்கடை மேலாளராக உள்ளார். இவருக்கு கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பு 31-வயதான சந்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த சந்தியாவுக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி மேலும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சந்தியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வந்ததாக தெரிகிறது.

கடந்த சில தினங்களாக சர்க்கரை நோய் அதிகரித்ததால், அவரது உறவினர்கள் சந்தியாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சந்தியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...